இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 1989-ஆம் ஆண்டு ரிலீசான புதிய பாதை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுகமான சுமைகள், சரிகமபதநி, புள்ளை குட்டிக்காரன், ஹவுஸ் ஃபுல், இவன், பச்சை குதிரை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பவும், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார்.

#image_title
இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதனிடையே சமீபத்தில் பார்த்திபன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பார்த்திபன் அளித்த பேட்டியில், எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்என்றும், தன்னுடைய மகன் இயக்குனராக பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தனது மகள் மருமகனும் இயக்குனராகவே ஆசைப்படுகிறார்கள் என்றும், தனது மூத்த மகள் உயிர் என்றும் கீர்த்தனா எனது அறிவு என்றும், மகன் அன்பு என்றும் தெரிவித்ததோடு பிள்ளைகளை இவ்வாறு தான் பிரித்து வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இவர் 2 மகள்கள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
