தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் போன்றவற்றில் நடித்து அசத்தியவர் நடிகர் நெப்போலியன். இவருடைய இயற்பெயர் குமரேசன். இவரது பெயரை நெப்போலியன் என்று மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா. இது குறித்து சித்ரா லட்சுமணன் நடத்தும் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நெப்போலியன் கூறியிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘புது நெல்லு புது நாத்து’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் பாரதிராஜா குமரேசன் என்ற எனது பெயரை நெப்போலியன் என மாற்றுவதாக கூறினார். அதை கேட்டவுடன் அய்யய்யோ நெப்போலியன் என்றால் சரக்கு பாட்டில் பேராச்சே. இதை கேட்டால் எல்லோரும் கிண்டல் செய்வார்களே என்று தயங்கினார்.
ஆனால் இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறோம். இதை இயக்குனரிடம் எப்படி சொல்வது என்று எண்ணிவிட்டு அமைதியாகி விட்டாராம். இயக்குனர் வைத்த பெயர் என்ன என்று எனது நண்பர்கள் எல்லோரும் கேட்டார்கள். அதை சொன்னவுடன் எனது நெப்போலியனா? ஏன் ஓல்ட் மாங், ராயல் பிராண்டி என பேர் வச்சிருக்க வேண்டியது தானே என்று கூறியிருந்தார்கள்.
இதற்கு நான் சொன்னேன் ரமேஷ், சுரேஷ் என்று வைத்திருந்தால் அது தமிழ் ஹீரோக்கள் பெயர். அமிதாபட்சன், ஷாருக்கான் என வைத்திருந்தால் அது ஹிந்தி பட ஹீரோக்கள். என் பெயர் உலகம் முழுக்க தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். அதனால் தான் நான் ஹாலிவுட் படங்களில் நடித்தாலும் என் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினேன். அப்படி சொல்லிய வாய் முகூர்த்தம் உடனே ஹாலிவுட் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துவிட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.