தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், லைலா உள்ளிட்டா பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் திரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
ஹெச். வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் விஜய் குறித்து ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கர், தம்பி விஜய் அமைதியாக இருப்பது நல்லது தான். அவர் அதிகம் பேச மாட்டார். அவர் என்ன பேச வேண்டும் என கேட்கிறேன். என்னை போன்றவர்களை பார்த்தால் வாங்க அண்ணா நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா என்று விசாரிப்பார். மற்றபடி அவர் வேலையில் அவர் சரியாக இருப்பார். நிறைய பேசினால் தலை மேல ஏறி கொள்வார்கள்.
இது பொதுவான விஷயம்தான். அதனால் தான் அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. அப்படி பேசினால் அடுத்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வாங்கி கொடு என்பார்கள். உடனே சரி என்று பொய் சொல்ல வேண்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்க தான் விஜய் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. அழகிய தமிழ் மகன் படப்பிடிப்பில் கூட எங்களுடன் நெருக்கமாக இருந்த அவர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசினார் என்று எம் எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…