Categories: சினிமா

அடக்கடவுளே.. இப்படி ஒரு ரசிகையா..? விமானத்தில் மைக் மோகன் மிரள விட்ட பெண் ரசிகை.. மனம் திறந்து பேசிய மோகன்..!

Spread the love

விமானத்தில் ஒரு ரசிகையின் செயலைப் பார்த்து தான் ஆச்சரியப்பட்டு போனதாக மோகன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் மோகன். இவரது உண்மையான பெயர் மோகன் ராவ். 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். அப்போது ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் மிகப்பெரிய ஹீரோவாக அசத்தியவர். ஒரு ஆண்டுக்கு 10 படங்கள் வரை நடித்து 24 மணி நேரமும் வேலை செய்தவர்.

இவருடைய படங்கள் அனைத்துமே 100 நாட்களுக்கு மேல் ஓடியதால் இவரை வெள்ளிவிழா நாயகன் எனவும் அழைத்தார்கள். இவரின் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இவருக்கு வியாதி இருப்பதாக கூட புரளிகளை கிளப்பி விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் தனது குரலாலே சூனியம் வைத்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

இவருக்கும் இவருக்கு டப்பிங் பேசிய பாடகருக்கும் இடையில் ஏற்பட மோதலால் தானே படங்களுக்கு டப்பிங் பேசுவதாக கூறி பேசினார். ஆனால் அவரின் குரலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் கூற வேண்டும். 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்ட பழம் என்ற திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த மோகன் தற்போது 14 ஆண்டுகள் கழித்து ஹரா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படம் ஓரளவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் நடித்திருப்பதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் youtube சேனலுக்கு மோகன் பேட்டியளித்து வருகின்றார். அதில் நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது:” மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தேன்.

அப்போது என்னிடம் 40 வயது மிக்க ஒரு ரசிகை தன்னுடன் பேசி வந்தார்கள். அந்த பெண்ணுடன் அவருடைய மகனும் இருந்தார். நடிகர் மோகனுடன் அந்தப் பெண் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தபோது அம்மா அதை எடுத்துக்காட்டுங்கள் என்று கூற உடனே அந்தப் பெண் தனது கழுத்தில் இருந்த தாலியை எடுத்துக் காட்டினார். அதில் ஒரு லாக்கெட் இருந்தது. அதை திறந்து காட்டிய போது அதில் தனது புகைப்படம் இருந்தது.

இதை பார்த்து நான் ஷாக் ஆகிவிட்டேன் மேலும் அவர் கூறியபோது சார் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் உங்களுடைய லாக்கெட் நான் வைத்திருக்கிறேன். திருமணமாக புதிதில் நான் உங்கள் ரசிகை என் கணவரிடம் கூறினேன். அவரும் சரி இந்த லாக்கெட்டை போட்டுக் கொள் என்று கூறிவிட்டார். நான் சாகும் வரை இதை போட்டுக் கொண்டுதான் இருப்பேன் என்று கூறினார்.

இதை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனதாக அவர் அந்த பேட்டியில் பேசியிருந்தார். எந்த ஒரு கணவரும் இன்னொருத்தர் புகைப்படத்தை தாலியில் வைத்துக்கொள்ள சம்மதிக்க மாட்டார். இருந்தும் அவர் சம்மதித்திருக்கின்றார் என்றால் அவருக்கு மிகப்பெரிய மனது. இப்படிப்பட்ட ரசிகர்களால் தான் நான் சினிமாவில் நிலைத்து நிற்கின்றேன்” என மிக நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் மோகன்.

Mahalakshmi

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

4 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

8 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

17 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

42 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

49 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago