எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் இயக்குனர், மாரிமுத்து(57) மாரடைப்பால் காலமானார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்து மயங்கி விழுந்தார்.
அவரை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார். நடிகர் மாரிமுத்து வாலி, சண்டை கோழி, பைரவா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.
