Categories: சினிமா

மௌன ராகம் படத்துக்கு ரசிகர் சொன்ன விமர்சனம்… அதன் பின்னர் தியேட்டருக்குப் போய் படம் பார்ப்பதையே நிறுத்திய மணிரத்னம்!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மூத்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இயக்குனர்கள் ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றோ அல்லது அவுட்டேட் ஆகியோ வெளியேறிவிடும் நிலையில் மணிரத்னம் தன்னுடைய 70 ஆவது வயதிலும் பிஸியான இயக்குனராக வலம் வருகிறார்.

மணிரத்னம் முதலில் இயக்கிய தமிழ் படம் இதயக் கோவில். அதன் பிறகு பகல் நிலவு படத்தை இய்க்கினார். இந்த இரு படங்களும் வெற்றிப்படமாக அமையாததால் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் தனது முதல் ஹிட்டை மௌனராகம் திரைப்படத்தின் மூலமாகதான் கொடுத்தார்.

அதன் பின்னர் அவருக்கு என்று பிராண்ட் வேல்யூ உருவானது. நாயகன், தளபதி என அடுத்தடுத்து அவரின் கிராஃப் எகிறிக் கொண்டே சென்றது. ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார். அதனால் இந்தி சினிமாவிலும் அவருக்கு நல்ல பெயர் உருவானது. இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தனர். இடையில் அவருக்கு பல வருடங்களாக ஹிட் இல்லாமல் இருந்த நிலையில் பொன்னியின் செல்வன் மூலமாகக் கம்பேக் கொடுத்தார்.

இந்நிலையில் மணிரத்னம் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய படங்களைத் திரையரங்குக்கே சென்று பார்ப்பதில்லை எனக் கூறியுள்ளார். அதில் “நான் என்னுடைய மௌன ராகம் படத்தை ஒரு புறநகர் தியேட்டருக்கு சென்று பார்த்தேன். அப்போது படம் பார்த்த ஒரு முதியவர் “என்னையா இவன், டைவெர்ஸ் கேக்குறவள ஒரு அறை அறையுறத விட்டுட்டு என்னென்னமோ பண்ணிட்டு இருக்கான்” என சொன்னார். அப்போதில் இருந்து நான் தியேட்டர்களுக்கு சென்று என்னுடைய படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

10 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

10 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

10 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

10 மணத்தியாலங்கள் ago