#image_title
சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே முதலில் நியாபகம் வருவது அருள் சரவணன் தான். காரணம், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அடிக்கடி தோன்றி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தனது நிறுவனத்தின் விளம்பரத்தில் தானே நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் அருள் சரவணன்.
விளம்பரம் மூலம் மிகவும் பாப்புலரான சரவணன் இந்த பாப்புலர் பத்தாதே இன்னும் பாப்புலர் ஆகவேண்டும் என்றல் அதற்கு ஒரே வழி சினிமா தான் என்று நன்கு புரிந்துகொண்டார்.அந்த வகையில் இவர் தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி, ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜெண்ட் சரவணா திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் எதிர்பார்த்தை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியான இப்படத்தில் சரவணன் விஞ்ஞானியாக களம் இறங்கினார் மேலும் ரோபோ சங்கர், தேவதர்ஷினி, காமெடி நடிகர் விவேக் போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சனமும் ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இருப்பினும் வசூலில் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் தனது முயற்சியை மட்டும் இன்னும் அவர் கைவிடவே இல்லை. இவர் கடந்த ஒரு வருடமாக 50க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டுள்ளாராம். ஆனால் அவருக்கு ஒரு கதை கூட பிடிக்கவில்லையாம்.
இந்நிலையில், எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் தற்பொழுது நடிக்கவுள்ளாராம் லெஜெண்ட். இப்போது துரை செந்தில்குமார் வாங்கும் சம்பளத்தில் 3 மடங்கு தருவதாக கூறி அவரை லாக் செய்துள்ளாராம். இந்த கூட்டணியாவது ஒர்க் அவுட் ஆகுமா..? எது எப்படியோ அடுத்த சம்பவத்துக்கு தயாராகி விட்டார் நம்ம லெஜெண்ட்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…