தமிழ் சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது நடிப்பால் மக்கள் மனதில் நினைத்து நிற்கிறார். பொதுவாக கமல்ஹாசன் ஏற்று நடிக்கும் வேடங்கள் வித்தியாசமாக இருக்கும். பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை கமல்ஹாசன் தன்வசம் ஆக்கியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, உலகம் சுற்றும் வாலிபன், 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், தசாவதாரம், அவ்வை சண்முகி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் படம் ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சமீபத்தில் உலகநாயகன் கமலஹாசன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, என்னால் கடவுள் இல்லாமல் வாழ முடியும் . 50 வருடங்களாக அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனது கருத்தை எனது நண்பர்கள் ஏற்றுக் கொள்ளலாம், நிராகரிக்கவும் செய்யலாம். ஆனால் நான் நிச்சயமாக சொல்கிறேன். கடவுள் இல்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் மக்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. முடிந்தால் நான் ஒரு எட்டு மணி நேரம் சமாளிப்பேன். அந்த நேரம் தான் நான் மக்களைப் பற்றி கனவு காண்கிறேன். ஏனென்றால் நான் அந்த நேரம் தூங்குவேன். மக்கள் இல்லாமல் என்னால் வாழவே முடியாது என கூறியுள்ளார்.