Categories: சினிமா

35 வருடத்துக்கு அப்புறம் கமல் செய்த வேலை.. ஆண்டவர் நான் சும்மாவா..! இந்த வயசிலும் மனுஷன் மிரட்டுறாரே..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஆண்டவர் என்கின்ற செல்ல பெயரால் உலகநாயகன் என்கின்ற அந்தஸ்துடன் தற்போது வரை கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக தனது திரைபாயணத்தை தொடங்கிய கமலஹாசன் தற்போது வரை தன்னுடைய சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக வளம் வரும் கமலஹாசன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார். விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலஹாசனின் மார்க்கெட் படு வேகத்தில் உயர்ந்திருக்கின்றது. தற்போது கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் கமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதே மாதத்தில் இந்தியன் 2 திரைப்படத்தையும் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அது ஜூலை மாதத்திற்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.

இதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் நடிக்கப் போகும் திரைப்படம் தக் லைப். நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி அமைவதால் ரசிகர்களிடையே மிகவும் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.  இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் ஆறு மாதத்திற்குள் கமலஹாசன் அவர்களின் மூன்று படங்கள் வெளிவருவது என்பது மிகப்பெரிய விஷயமாகும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடக்காத ஒரு நிகழ்வு இது. 1989 ஆம் ஆண்டு மட்டுமே இவரின் மூன்று படங்கள் ஆறு மாதத்திற்குள் வெளியாகிறது. மலையாளத்தில் சங்கையன், தமிழில் வெற்றி விழா, தெலுங்கு என படங்கள் வெளியாகிய கமலஹாசனுக்கு வெற்றிகரமாக அமைந்தது. அதை தொடர்ந்து 35 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.

இந்த மூன்று திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். கல்கி மற்றும் இந்தியன் 2 திரைப்படம் முடிந்துவிட்ட நிலையில் தக் லைப் படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. குறிப்பிட தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டால் இந்த அதிசயம் கட்டாயம் நடக்கும்.

இது தமிழ் சினிமா உலகிற்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும். தற்போதுள்ள நடிகர்கள் ஆண்டுக்கு ஒரு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகி வரும் நிலையில் கமலஹாசனின் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாவது மிகப்பெரிய விஷயம்தான். தமிழில் தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் கூட வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு திரைப்படங்கள் என்று நடித்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த தலைமுறை காணாத ஒரு அதிசயம் தான் இது என்று சினிமா ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

4 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

4 மணத்தியாலங்கள் ago