தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.
குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ஜீவா சமீபத்தில் அடைத்த பெட்டியில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரவி மரியா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ஆசை ஆசையாய் திரைப்படம் குறித்து பேசி உள்ளார். அதில், ஆசை ஆசையாய் படத்தில் என் பெண்ணே என்ற பாடல் எடுக்கும் போது சராசரியாக ஒரு படத்திற்கு 50 முதல் 60 ஆயிரம் அடி பிலிம் ரோல் ஆகும் என்று சொல்லுவாங்க. ஆனால் அந்த ஒரு பாட்டு பண்ணும் போது நான் 25 ஆயிரம் அடி காலி பண்ணிட்டேன்.
பாதி படத்தோட ஃபிலிம்மை ஒரே பாட்டுல காலி பண்ணிட்டேன். மொத்தமா படம் முடிஞ்சு அவங்க கைக்கு வரும்போது 2 1/2 லட்சம் அடி ஆச்சு. அவ்வளவு டேக் வாங்கின, சுத்தமா நடிப்பு வரவே இல்ல. இன்னைக்கு இவ்வளவு பொறுமையா நடிக்கிறதுக்கு காரணமே அன்னைக்கு அந்த படத்துல நடிச்சது தான். இன்று நல்லா பைக் ஓட்டுகிறேன் என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தில் நடிச்சது தான். ரவி மரியா சார் எனக்கு அந்த அளவுக்கு நடிப்பு சொல்லி கொடுத்தாரு. அவருக்கு தான் நான் நன்றி சொல்லணும் என்று ஜீவா பேசியுள்ளார்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில்…
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,…