#image_title
ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்து தமிழ் நடிகர் ஜெகன் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.
இந்தியா முழுவதும் இல்ல, உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருப்பது ஆனந்த் அம்பானியின் திருமணம் தான். மிகப்பெரிய பொருட்செளவில் பிரம்மாண்டமாக இவரின் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூலை 12ஆம் தேதி மும்பையில் இருக்கும் ஜியோ உலக வர்த்தக மையத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் பல நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
திருமண வைபோகங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சிகள் களைக்கட்டி வருகின்றன. இந்த திருமணத்திற்கு மட்டும் சுமார் 4000 முதல் 5000 வரை செலவாகி இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இது எல்லாம் அம்பானி வீட்டு சொத்தில் வெறும் 0.5% தானம். உலகமே உற்றுப் பார்க்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்திருக்கிறார்கள் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி.
இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழ் சினிமா, கன்னட சினிமா, தெலுங்கு சினிமா, பாலிவுட் பிரபலங்கள், ஹாலிவுட் பிரபலங்கள், மிக முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் ஆட்டம் போட்டு கொண்டாடிய வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் மிக வைரல் ஆகி வந்தது.
ஏன் தலைவர் ரஜினி கூட அம்பானி வீடு திருமணத்தில் நடனமாடி அசத்தி இருக்கின்றார். இப்படி அனைவரும் இவர்களின் திருமணத்தை பற்றி பேசி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ஜெகன், அம்பானி திருமணம் குறித்து ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கின்றார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவதுல்: “அன்புள்ள ஆனந்த் அம்பானி உங்களுக்காக நான் வருந்துகிறேன்.
மிகவும் ஏழைகளின் திருமணத்தில் கூட வந்தவர்களின் கவனம் அனைத்தும் மணமக்கள் மீது இருக்கும். ஆனால் உங்கள் திருமணத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. உங்களையும் உங்கள் வருங்கால மனைவியையும் தவிர அங்கு வந்த பல பிரபலங்களின் மீது தான் அனைவரின் கவனமும் இருந்தது. தயவு செய்து தேனிலவுக்காவது தனியாக சென்று விடுங்கள்” என்று அவர் கூறியிருக்கின்றார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தங்ககுமார் என்பவருக்கும், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி என்பவருக்கும்…
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், நள்ளிரவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் கழுத்தறுத்துக் கொலை…
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி அதிரடியாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி…
மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக அலுவலகம் மீது, பாஜக தொண்டர்கள் என்று கூறப்படும்…
பெங்களூருவைச் சேர்ந்த நாகேந்திரா 30 என்பவரும், 23 வயதுடைய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநரான இளம் பெண் ஒருவரும் கடந்த…
தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் மனைவியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…