“தலைவன்” என்று தனுஷ் பெருமையாக சொல்வார்…! மேடையில் உணர்ச்சிவசப்பட்ட சகோதரி… அரசியலுக்கு பிள்ளையார்சுழி…? விவாதத்தை கிளப்பிய பேச்சு…!!

By Devi Ramu on ஆடி 28, 2026

Spread the love

பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் தனது 43-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், திருவள்ளூரில் அவரது ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தாங்கள் வெறுமனே விழா முடிந்து கலைந்து செல்லும் கூட்டமல்ல என்றும், இணையத்தில் தேவையற்ற எதிர்மறை கருத்துகளைப் பரப்பும் நபர்கள் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, தனது தேசிய விருது விவகாரம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், பிறரைத் தட்டிவிடாமல் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மேடையில் பேசிய தனுஷின் சகோதரி, ரத்த தானம் செய்ய இவ்வளவு திரளான ரசிகர்கள் கூடியிருப்பதைப் பார்க்கும்போது தனுஷ் பெருமையுடன் “இவர்களுக்கு நான் தான் தலைவன்” என்று உரக்கச் சொல்வார் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் சென்னை வெள்ளத்தின் போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி செய்ய தனுஷ் ரசிகர்களே உறுதுணையாக இருந்தனர் என்பதையும் நினைவு கூர்ந்தார். தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேச்சுக்கள், அவர் விரைவில் அரசியலில் களமிறங்குவார் என்ற புதிய விவாதத்தைத் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் தூண்டியுள்ளது.