#image_title
நடிகர் தனுஷ் டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் மகன், இயக்குநர் செல்வராகவனின் தம்பி குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற அடையாளங்களை கொண்டவர். அதுமட்டுமின்றி நடிகர், பாடகர், சிறந்த நடன கலைஞர் என்ற சிறப்பு அடையாளங்களும் இவருக்கு உண்டு. தனுஷ், துள்ளுவதோ இளமை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒல்லி நடிகர் என துவக்கத்தில் கலாய்க்கப்பட்ட அவர், அடுத்தடுத்த வெற்றிப்படங்களை தந்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் தனுஷை வேற லெவல் நடிகராக மாற்றியது.
Dhanush
துவக்கத்தில் கமர்ஷியல் ஹீரோவாக நடித்து வந்த தனுஷை ஒரு கதாநாயகனுக்குரிய அம்சங்களுடன் மாற்றித் தந்தவர் இயக்குநர் வெற்றிமாறன்தான். ஆடுகளம், அசுரவ் படங்களில் தனுஷ் நடிப்பு வேறுபட்டு இருந்தது. மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்தில் தனுஷ் நடிப்பு மாறுபட்டு இருந்தது. இப்போது தனுஷின் 50வது படம் கேப்டன் மில்லர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வரும் பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது.
Dhanush
இந்நிலையில் தனுஷ் நடித்த படங்கள் 200 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்துக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர்கள் மத்தியில் சமீபத்தில் பேச்சு அடிபட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மொழிகளில் தனுஷ் நடித்த படங்கள் தியேட்டர்கள் வியாபாரம், டிஜிட்டல் ரைட்ஸ் போன்றவை வாயிலாக 200 கோடி ரூபாயை ரீச் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் மற்ற மொழிகளில் மற்றும் சாட்டிலைட், டிஜிட்டல் என இன்னும் பிஸ்னஸ் அதிகரிக்கும் போது வியாபாரம் இன்னும் பெருகும் வாய்ப்பு உள்ளது. அதனால் இதை அறிந்தால் தனுஷ் தரப்பில் இருந்து அவரது சம்பளம் இப்போது வாங்குவதில் இருந்து இன்னும் 10 கோடி, 20 கோடி ரூபாய் என உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பரபரப்பாக, கோலிவுட்டில் பேசப்படுகிறது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…