நடிகர் பாபி சிம்ஹாவின் மகள் மற்றும் மகனா இது?… இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே… லேட்டஸ்ட் புகைப்படம்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர்  ‘காதலில்  சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். இவர் ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.

   

நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், பீட்சா, ஆடாம ஜெயிச்சோமடா ,மசாலா படம்,    கோ 2, பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை ரேஷ்மி மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முத்ரா என்ற மகளும் அர்ஜுன் சிம்ஹா  என்ற மகனும்  இருக்கிறார்கள்.

இவர் சமீபத்தில் ‘ராவண கல்யாணம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மனைவி ரேஷ்மி மேனன் தயாரித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் வசந்தா என்ற வெப் சீரியசிலும் மற்றும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகர் பாபி சிம்ஹா இணையத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் .

தற்பொழுது நடிகர் நடிகர் பாபி சிம்ஹா தனது மகள் மற்றும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் பாபி சிம்ஹாவின் குழந்தைகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.