Categories: சினிமா

வாடி போடி-னு பேசுற அளவுக்கு எனக்கு Friend.. ஏன் அப்டி பண்ணானு தெரில.. அஞ்சலி குறித்து ஓப்பனாக பேசிய பிளாக் பாண்டி..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக துணை கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருப்பவர் தான் பிளாக் பாண்டி. சினிமா மட்டுமல்லாமல் சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சினிமாவை பொருத்தவரை இவர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. அதனைத் தொடர்ந்து இவர் நடித்த சாட்டை திரைப்படத்திலும் சிறப்பான பெயரை பெற்றார். இப்படி நல்ல நடிகர் என்று அடையாளம் இருந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக கிடைப்பதில்லை.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்பின் மீது சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்படி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நாகேஸ்வரி மற்றும் ஆட்டோகிராப் என வரிசையாக இவர் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு இவருக்கு துணை கதாபத்திரங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையிலும் தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியான ரோல்கள் எதுவும் இவருக்கு கிடைக்கவில்லை. இறுதியாக விஜயின் கோட் திரைப்படத்தில் கூட ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

தற்போது இஎம்ஐ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிளாக் பாண்டி சமீபத்தில் அடித்த பேட்டியில் நடிகை அஞ்சலி பற்றி பேசியுள்ளார். அதில், அங்காடித் தெரு திரைப்படத்திற்கு முன்பே எனக்கும் அஞ்சலைக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. வாடி போடி என்று கூப்பிடும் அளவிற்கு இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு. நடன இயக்குனர் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள் தான் நாங்கள். நாங்கள் இருவரும் நடன வகுப்பில் நடனமாடி பழகியபோது அஞ்சலி எனக்கு முன்பதாக நடனம் ஆடுவார். உன்னை பார்த்து தான் நான் நடனமாடி கொண்டிருக்கிறேன் ஒழுங்கா ஆடு என்று சொல்லுவேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஏன் இவர்களுடன் பழகினோம் என்று கூட யோசனை வரும். நிறைய பேர் அப்படி தான் யோசனை செய்கிறார்கள் என நினைக்கிறேன். நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா என்று கூட கேட்டு இருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லை என்று அஞ்சலி கூறினார். மீண்டும் நாங்கள் ஜெயம் ரவியுடன் இணைந்து சகலகலா வல்லவன் படம் நடித்தோம். அப்போது தான் பேசினேன். உனக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்டபோது இல்லை என சொல்லிவிட்டார். இரண்டு மூன்று முறை மெசேஜ் கூட அனுப்பினேன் ஆனால் பதில் சொல்லவே இல்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். இதுவும் கடந்து போகும் என நகர்ந்து விட்டேன் என ப்ளாக் பாண்டி பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

3 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

7 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

11 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

19 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

26 minutes ago

“விஜய்யை குறைச்சு எடை போடாதீங்க” திமுகவுக்கு ஆப்பு வைக்கப்போவது உறுதி… முக் அழகிரி மகள் அதிரடி..!!

தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…

31 minutes ago