நடிகர் ஆர்யாவின் மகள் இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா?… அம்மாவை போல செம கியூட்டா இருக்காங்களே… 

By Begam on ஆடி 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

   

தற்பொழுது இவர் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

 

 

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள் நடிகர் ஆர்யா மற்றும் சயிஷா.

 

தற்பொழுது நடிகர் ஆர்யா தனது செல்ல மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி தன் மகளுடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் ஆர்யாவின் மகள் எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்களா?’ என்ற ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…