தனது மனைவியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ஆர்யா…. வைரலாகும் புகைப்படங்கள்…

By Samrin

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர்ஆர்யா. இவரின் உண்மையான பெயர் ஜம்ஷாத் சேத்திரகாத். இவர் திரைப்படத்திற்காக தன் பெயரை ஆர்யா என்று மாற்றிக் கொண்டார். தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.

   

பின்னர் சென்னை வண்டலூரில் உள்ள கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார் .இவருக்கு சத்யா என்ற சகோதரர் உள்ளார் .இவரும் தமிழ் படங்களில்  நடித்துள்ளார் .2005 ஆம் ஆண்டு  விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான படம் ‘அறிந்தும் அறியாமலும்’  இப்படத்தில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ திரைப்படத்தில் நடித்தார் .இப்படமானது திரை வாழ்க்கை ஒரு திறப்புமுனையாக அமைந்தது .இவர் தமிழில் நான் கடவுள் ,மதராசபட்டினம் ,வேட்டை ,ராஜா ராணி, ஆரம்பம் இரண்டாம் உலகம் , போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் .இதை தொடர்ந்து இவர் காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் மக்கள் மத்தியில்  மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

நடிகர் ஆர்யா ‘தி ஷோ பீப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தில் தொடங்கி பல படங்களை தயாரித்துள்ளார் .இவர் தயாரிப்பு நிறுவனத்தில் அமரகாவியம், ஜீவா ,ரெட்டை பேரல், பெரிய தந்தை ,கேப்டன் போன்ற படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Ariana என்ற மகளும் உள்ளார் . நடிகை சாயிஷா தமிழில் வனமகன்,கடைக்குட்டி சிங்கம்,ஜுங்கா,கஜினிகாந்த் ,காப்பான் போன்ற படங்களில் நடித்துள்ளார் .

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவரின் மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.