ஆக்ஷன் கிங் அர்ஜுன் சீரியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் அர்ஜுன். 90’ஸ் காலகட்டத்தில் பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தன்னுடைய கெரியரில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். அதிலும் ஏழுமலை, ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
பின்னர் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட அர்ஜுன் மீண்டும் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். கடைசியாக லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் பல திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.
சமீபத்தில் தான் இவரது மகள் ஐஸ்வர்யா அவர்களுக்கு ராமையாவின் மகன் உமாபதி ராமையா உடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வைரலாகி வந்தது.
தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் வந்திருக்கும் அர்ஜூன் சீரியல் ஒன்றை சொந்தமாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது அந்த சீரியலை அவரே தயாரித்து இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதில் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த செய்தி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே நடிகர் அர்ஜுன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.