தமிழ் சினிமாவில் தன்னுடைய விடா முயற்சியால் முன்னணி நடிகராக உயர்ந்த நிற்பவர் தான் நடிகர் அஜித். இவர் ஆரம்ப காலத்தில் ஏராளமான தோல்விகளை சந்தித்தாலும் சற்றும் மனம் தளராமல் சினிமாவிற்கான வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள இன்றும் போராடி வருகிறார். இவர் தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை தற்போது கொடுத்து வருகிறார். ஆனால் இவர் சினிமாவில் வந்ததே ஒரு விபத்து தான் என்று ஒரு பேட்டியில் இவரை கூறியுள்ளார். சினிமாவில் நுழைந்ததற்கு பிறகுதான் எப்படியாவது நிலைத்து நிற்க வேண்டும் என போராடி வந்துள்ளார்.
அஜித் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு ஆட்டோ மொபைல் கடையில் வேலை பார்த்தார். சிறுவயதிலிருந்தே இவருக்கு கார் மற்றும் பைக்கின் மீது அதிக ஆர்வம். அதனால் படிப்பின் மீது ஆர்வம் இல்லாத அஜித் ஆட்டோமொபைல் கடையில் சேர்ந்து ஒர்க் ஷாப் ஒன்றின் மீது ஆர்வமாக இருந்துள்ளார். ஆனால் தன்னுடைய பையன் மெக்கானிக்காக இருப்பதை அவரின் பெற்றோர்கள் விரும்பவில்லை.
பிறகு ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தில் மெக்கானிக் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வேலையில் சேர்த்துள்ளனர். இப்படி தன்னுடைய கவனத்தை மெக்கானிக் சம்பந்தப்பட்ட வகையில் கொண்டு போன அஜித்துக்கு சினிமாவில் வந்தது ஒரு விபத்து என பேட்டியில் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்காவது நான் சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்து அதன் மூலம் மெக்கானிக் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்வேன் என கூறியுள்ளார்.