CINEMA
த்ரிஷாவும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த நடிகை யார் தெரியுமா?..
தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் முதலில் 100 கோடி வசூல் ஈட்டிய நடிகைகள் இவர்கள் இருவர்களில் யாருமே கிடையாது.
தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் இந்திய திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயா தான். இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஸ்ரேயா சரண் அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கின்றார்.
தொடர்ந்து தற்போது குடும்பம் மற்றும் சினிமா துறை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவாஜி. இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருப்பார். இந்த திரைப்படம் 80 கொடியில் தயாரிக்கப்பட்ட நிலையில், சுமார் 160 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
சிவாஜி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த நடிகை என்ற பெருமையை இவர்தான் பெற்றார். ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஐஸ்வர்யா ராய் தான். அவரால் நடிக்க முடியாமல் போனதால் ஸ்ரேயா ஒப்புக்கொண்டு இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.