இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

By Mahalakshmi on ஏப்ரல் 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். புகழ்பெற்ற இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான இவர் 1996 ஆம் ஆண்டு தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர்.

   

அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் தனது பாடலுக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கின்றார். இவரின் பல பாடல்கள் இன்னும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது. சமீப காலமாக பெரியளவு திரைப்படங்களில் இவர் இசையமைக்கவில்லை. ஆனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்கின்றார்.

   

 

இது குறித்து செய்தியாளர் பிஸ்மி ஒரு தகவல் தெரிவித்து இருக்கின்றார். அதாவது யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒரு அன்பிட் என்று கூறி இருக்கின்றார். இவர் தற்போது ஒரு பாடல் போடுவதற்கு கூப்பிட்டால் வருவதில்லை, கம்போசிங் கூப்பிட்டாலும் வருவதில்லை மிகவும் சிரமப்பட்டு அவரிடம் பாடல்களை வாங்க வேண்டி இருக்கின்றது.

இசையமைப்பாளர் தொழிலில் இருந்து மிகத் தொலைவுக்கு சென்று விட்டார் என்று கூறியிருந்தார். அவரை பிடித்து இழுத்து கட்டாயப்படுத்தி பாடலை கொடுங்கள் என்று கேட்டால் அவர் எப்படி கொடுப்பார் என கேள்வி எழுப்பியுள்ளார். இவரை வற்புறுத்துவதனால் தான் தற்போது அவரது பாடல்கள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இந்த விஷயம் வெங்கட் பிரபுவுக்கு தெரியும். தெரிந்திருந்தும் கூட ஒரு பெரிய நடிகரை வைத்து நாம் இயக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை போடலாமா? இந்நேரம் அனிருத் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தால் படத்தின் லெவலே வேறு மாதிரி இருந்திருக்கும், வெங்கட் பிரபுவுக்கும் நல்ல பேர் கிடைத்திருக்கும் என்று குற்றம் சாட்டு இருக்கிறார் பிஸ்மி.