Categories: சினிமா

நண்பனின் மகனுக்கு உதவ மறுத்த சிவக்குமார்.. ஆனால், அஜீத் செய்த செயலால் நல்ல நிலைக்கு சென்ற குடும்பம்..

Spread the love

தமிழ் சினிமாவில் சிலர் பெரிய உதவிகளை செய்தாலும் அதை விளம்பரப்படுத்துவது இல்லை. அதில் நடிகர் அஜீத்குமாரும் ஒருவர். பிரபல பத்திரிகை ஒன்றில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியராக பணிபுரிபவர் அவர். அவரது ஓவியங்களை பார்த்து, அடிக்கடி அவரை அழைத்து பாராட்டுபவர் நடிகர் சிவக்குமார். ஏனெனில், அவரும் ஒரு ஓவியர். இந்நிலையில், பத்திரிகை ஓவியரின் மகன்கள் இருவரும் நன்றாக படித்தனர். ஒரு கட்டத்தில் அவரது இளையமகன், அமெரிக்காவுக்கு படிக்க செல்கிேறன். அங்கு பகுதிநேரமாக ஏதாவது வேலை செய்து, அந்த வருமானத்தில் படிப்பு செலவை சமாளித்துக்கொள்கிறேன் என்க, ஓவியரும் அமெரிக்காவுக்கு மகனை அனுப்பி வைக்கிறார்.

ஆனால் அங்கு கல்லூரி நிர்வாகம், சட்ட சிக்கல் காரணமாக அந்த ஓவியரின் மகனை, பகுதிநேர பணிசெய்ய அனுமதி மறுக்கிறது. அதனால், சென்னையில் இருந்து ஓவியரே, தன் மகனுக்கான படிப்பு செலவை அனுப்பி வைக்கிறார். கிடைக்கிற வருமானத்தில், நிறைய மிச்சம் பிடித்து, செலவுகளை குறைத்து, பலரிடம் கடன் வாங்கி, பணம் அனுப்பி வைக்கிறார்.

ஒரு கட்டத்தில் மிகுந்த நெருக்கடியில் பணம் அனுப்ப முடியாத நிலை ஓவியருக்கு ஏற்படுகிறது, இறுதியாண்டு படிக்கும் மகன், பணம் கட்டாவிட்டால் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என புலம்புகிறார். இந்த நேரத்தில், தனது நீண்ட கால நண்பர், நடிகர் சிவக்குமாரை அந்த ஓவியர் போனில் தொடர்பு கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட அவர், சூர்யாவும் கார்த்தியும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வீடு கட்டுவதால் என்னிடம் பணம் இல்லை. கஷ்டத்தில் இருக்கிறேன் எனக் கூறுகிறார்.

அதற்கு ஓவியர், அகரம் பவுண்டேசன் மூலம் உதவ முடியுமா எனக்கேட்க, அதில் முக்கிய பொறுப்பு வகித்த ஞானவேல் ராஜாவை தொடர்பு கொள்ள சொல்கிறார். ஞானவேல் ராஜாவிடம் பேச, அனாதையாக இருந்தால் மட்டுமே அந்த மாணவனுக்கு உதவுவோம். ரூல்ஸ்படி உங்களுக்கு உதவ முடியாது என்கிறார். ஏமாற்றமடைந்த ஓவியர், சிவக்குமாரை மீண்டும் போனில் தொடர்புகொள்ள அவர் போனை எடுக்கவில்லை. ஆனால், ஞானவேல்ராஜா ஓவியரை போனில் அழைத்து, நான்தான் முடியாது என சொல்லிவிட்டேனே, எதற்காக அவருக்கு போன் செய்து தொந்தரவு பண்றீங்க, என கடிந்துள்ளார்.

இனி என்ன செய்வது என தவித்த ஓவியர், பலரிடம் போராடி கடைசியில் அஜீத் வீட்டு கதவுகளை தட்டி விஷயத்தை சொல்லி இருக்கிறார். உங்கள் மகனின் முழு விவரங்களை கொடுங்க, பையனின் மொத்த படிப்பு செலவையும் செலுத்தி விடுகிறோம் என்று கூறி, அதன்படியே செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு மாணவனின் படிப்புக்கான மொத்த செலவையும் தந்துவிட்டு, அதற்கான விளம்பரமே காட்டாமல் அமைதியாக இருந்திருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.

admin

Recent Posts

பக்தர்கள் மத்தியில் அரங்கேறிய பயங்கரம்.. மதுரையில் சிறுவனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த மர்ம கும்பல்..!

மதுரை புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் மர்ம…

2 minutes ago

புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…

26 minutes ago

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

37 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

43 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

48 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

58 minutes ago