“இனி யாரையும் விடமாட்டோம்”… ‘அவங்க எந்த மட்டத்தில் இருந்தாலும் அவ்வளவுதான்’… அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நெத்தியடி….!

Spread the love

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசு பொறுப்பேற்று 45 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால், திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த சற்றே கால அவகாசம் தேவை என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்திற்கு ஒரு நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் தொலைநோக்குச் சிந்தனையாக உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றார். மேலும், தவறு செய்தவர்கள் எந்த உயர்மட்டத்தில் இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய அரசின் ஒவ்வொரு துறை அமைச்சரும் தங்களின் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

மக்களின் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது என்று சாடிய அமைச்சர், அவர்கள் தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான கருத்துகளைக் கூறி மாநில வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் பிறந்தநாளன்று பள்ளி மாணவர்கள் கட்சிக்கொடியை ஏந்தி வந்ததில் எவ்வித தவறும் இல்லை என்றும், அது ஒரு உணர்வுப்பூர்வமான எழுச்சி என்றும் விவரித்தார். தமிழகத்தில் மாற்றம் வேண்டி வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் சொந்த செலவில் வந்து வாக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், குழந்தைகளை நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை, அது அவர்களின் அன்பின் வெளிப்பாடு என்றும், தங்களின் விருப்பமான விசில் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரிய குழந்தைகளின் எழுச்சியே இது என்றும் விளக்கமளித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்துப் பேசிய அவர், எங்கு சென்றாலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் லட்சியப் பயணம் என்றும், இதற்கான தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரைப் போலவே, மாநிலத்தில் ஆளுநரையும் நாம் மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சியினர் ஆளுநர் பதவியையே கிண்டல் செய்யும் வகையில் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். மேகதாது அணை விவகாரத்தில் பொறுப்புள்ள அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளதாகக் கூறிய அவர், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் ஒரு நகைச்சுவையாளர் போலப் பேசுவதாகவும், அவருடைய விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பருவமழையைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை குறைவாகவே உள்ளதால், வடமேற்கு பருவமழை வரும்போதுதான் நிலைமை மாறும் என்றும், கடந்த 21 ஆண்டுகளில் 7 முறை மட்டுமே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மழையில் 200 மூட்டை நெல்கள் நனைந்து வீணானதாகக் கூறுவது தவறான தகவல் என்றும், 20 மூட்டைகள் மட்டுமே நனைந்துள்ள நிலையில், அவற்றை தார்ப்பாய்கள் கொண்டு பாதுகாக்க உணவுத்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறினார். இறுதியாக, திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் ரகசிய சமரசம் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், புதிய ஆட்சி அமைந்த பிறகு மரபுப்படி பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் சந்திப்பது இயல்பானது என்றும், ஆட்சி அமைக்க யாரிடமும் தாங்கள் உதவி கேட்கவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

Nanthini

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

32 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

45 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

1 மணத்தியாலம் ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

2 மணத்தியாலங்கள் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago