தமிழகத்தில் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான இழப்பீடு தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி விபத்து மரணத்திற்கான இழப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. விபத்தில் உடல் உறுப்பை இழந்தால் இனி ஒரு லட்சம் (முன்பு 20000) வழங்கப்படும். அதேபோல இனி இயற்கை மரணத்திற்கு 30 ஆயிரம் இறுதி சடங்கு செய்ய பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
