neerkovai

வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டியது வலியை போக்கும் நீர்கோவை மாத்திரை… யார் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…?

By Meena on அக்டோபர் 27, 2024

Spread the love

நம் முன்னோர்களாகட்டும் பாட்டி தாத்தா காலத்திலும் நமக்கு காய்ச்சலோ சளியோ, இருமலோ தலைவலியோ எது வந்தாலும் உடனடியாக வீட்டு வைத்தியத்தை தான் செய்வார்கள். யாரும் அந்த காலத்தில் உடனடியாக மருந்து கடைக்கு சென்று மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆங்கில மருந்துகளுக்கே செல்ல மாட்டார்கள். வீட்டில் இருக்கும் மிளகு துளசி போன்றவற்றை வைத்தே வீட்டு வைத்திய முறையைத்தான் கையாளுவார்கள். அதில் ஒரு முறை தான் பத்து போடுவது.

neer kovai

   

தலைவலி வந்தால் தலையில் வெங்காயத்தை அரைத்து பத்து போடுவது மற்ற வலிகளுக்கு மூலிகைகளை வைத்து 10 போடுவது என பல வகைகளில் செய்வார்கள். அப்படி ஒரு பத்து போடும் ஒரு மூலிகை மாத்திரை தான் நீர் கோவை மாத்திரை ஆகும். சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நீர் கோவை மாத்திரை மஞ்சள், கிராம்பு, கடுக்காய், சுக்கு, மிளகு போன்ற மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்படுவது. இந்த நீர் கோவை என்னும் மருந்து மாத்திரை போல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

   

சிவப்பு செங்கல் நிறத்தில் இந்த நீர்க்கோவை மாத்திரைகள் இருக்கும். இந்த நீர் கோவை மாத்திரையை 1 அல்லது 2 எடுத்து வெந்நீரில் மை போல குழைத்து அதை நெற்றி கன்னங்கள் என போட வேண்டும். இந்த நீர் கோவை மாத்திரையை வைத்து பத்து போடும்போது தலையில் அதிகப்படியாக நீர் சேர்த்து தலைபாரம் எடுத்தாலோ வலி இருந்தாலும் சைனஸ் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த நீர் கோவை மாத்திரை அருமருந்தாக செயல்படுகிறது.

 

ஐந்து வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வயதானவர்கள் வரை எல்லோரும் இந்த நீர் கோவை மாத்திரையை தயங்காமல் பயன்படுத்தலாம். இன்றைய காலகட்டத்தில் ஆங்கில மருந்து மாத்திரைகள் அதிகமாக மருந்து கடைகளில் வாங்கி வந்து எடுக்கிற பழக்கம் இருக்கிறது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இது போன்ற மருந்துகளை சாப்பிடவே கூடாது. அப்படியே மருத்துவர் ஆலோசனை படியே இந்த ஆங்கில மருந்துகள் சாப்பிடும் போது நம்முடைய உள்ளுறுப்புகள் அதிகமாக பாதிப்படைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உள்ளுறுப்புகளை பாதிக்க கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்தது தான் இந்த ஆங்கில மாத்திரைகள். ஆங்கில வழி மாத்திரைகளில் உடனடியாக நமக்கு வலி நிவாரணிகள் என்பதானாலும் அதில் தீங்கு இருக்கத்தான் செய்கிறது. இது மாதிரி நீர் கோவை கொண்டு பத்து போடும்போது நமக்கு வெளிப்புறமாகத்தான் இதை செயல்படுத்துவோம் என்பதால் உள்ளுறுப்புகளுக்கு எந்த பிரச்சனையுமே வராது. அதனால் உங்களுக்கு தலைவலி சளி இருந்தால் உடனடியாக ஆங்கில மருத்துவத்தை நாடாமல் இது போன்ற வீட்டு வைத்திய முறையை முயற்சி செய்து பாருங்கள். நீர்கோவை மாத்திரை பத்து போடுவது கஷாயம் வைத்து குடிப்பது போன்றவற்றை நம் உடலுக்கு எந்த தீங்கையும் விலகிக்காமல் அதே சமயம் உடல் உபாதையும் சரி செய்யும் தன்மை கொண்டது.