#image_title
இந்து மத தெய்வங்களில் பெருமாளை பணக்கார கடவுள் என்று சொல்லுவர். பெருமாளை வழிபட்டால் நம் பணக்கஷ்டம் தீரும் செல்வ செழிப்பு உண்டாகும் என்று கூறுவர். அப்படி பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினம் எது? எப்படி வழிபாடு செய்வது பூஜையில் எந்த பொருளை கட்டாயம் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி இனி காண்போம்.
பெருமாளுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. திதி என்று பார்த்தால் ஏகாதசி திதி பெருமாளை வழிபட உகந்ததாகும். வளர்பிறை ஏகாதசி தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு நாட்கள் வரும். இந்த இரண்டு ஏகாதசி நாட்களுமே பெருமாளை வழிபாடு செய்யலாம். இந்த ஏகாதசி திதியில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
சனிக்கிழமை ஆனாலும் சரி ஏகாதசி நாட்கள் ஆனாலும் சரி பெருமாளுக்கு வழிபாடு செய்வதற்கு முக்கியமாக தளிகை இடுவார்கள். தளிகை என்றால் சைவ உணவு ஆகும். ஒரு சிலர் ஐந்து வகை சாப்பாடு வடை பாயாசத்தோடு வைப்பார்கள். ஒரு சிலர் சாம்பார் பொரியல் வடை பாயாசத்தோடு பூஜை செய்வார்கள். அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று அவரை மனதார வேண்டிக் கொண்டால் நம் நினைத்த காரியம் நிறைவேறும் செல்வ செழிப்பு உண்டாகும்.
மேலும் பெருமாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கட்டாயம் வைக்க கூடிய ஒரு பொருள் என்னவென்றால் அது துளசி. பெருமாள் பூஜையில் துளசி மாலை துளசி தீர்த்தம் வைத்து வழிபட வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்றால் கூட பெருமாளுக்கு துளசி மாலை வாங்கி சாற்றினால் அவர் மனமகிழ்ந்து கஷ்டத்தை நீக்கி வாழ்க்கையில் முன்னேற்றத்தை அருளுவார் என்பது ஐதீகம்.
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…