#image_title
இயற்கை ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பலர் இருக்கின்றார்கள். சமூக சேவைக்காகவே தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்தாவர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர்தான் வெளியே தெரிவார்கள். மக்களிடையே நல்ல விஷயங்கள் சென்றடைய அதாவது நடுவில் ஒரு பிரபலமான ஒரு படமோ ஏதாவது ஒன்று இருந்தால் தான் அவர்களை போய் சென்றடையும். அப்படி மெய்யழகன் படம் மூலமாக பிரபலமானவர்தான் சென்னையின் Parrot Man சுதர்சன். அவரைப் பற்றி இனி காண்போம்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருப்பவர் சுதர்சன். இவரது வீட்டில் தினமும் கிளிகள் கூட்டம் அலைமோதும். மெய்யழகன் படத்தில் வரும் காட்சி இவரை மையமாக வைத்து எடுத்தாது தான். தினமும் பறவைகளுக்கு உணவளித்து வருகிறார் சுதர்சன். இதைப்பற்றி அவர் என்ன கூறியிருக்கிறார். எதனால் பறவைகளுக்கு உணவளித்து வருகிறார் என்பதை பகிர்ந்து இருக்கிறார்.
சுதர்சன் கூறியது என்னவென்றால் நான் இளம் வயதில் இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். அப்போது சோகமாக மாடியில் அமர்ந்திருந்தேன். அப்போது பக்கத்து வீட்டில் ஒரு அம்மா காகத்துக்கு உணவளிப்பதை பார்த்தேன். அப்போதுதான் நாமளும் பறவைகளுக்கு ஏன் உணவு கொடுக்க கூடாது என்ற எண்ணம் உண்டானது. ஏனென்றால் மனிதர்கள் நாம் சாப்பிடுவோம். பறவைகள் எங்கே போய் சாப்பிடும் என்ற எண்ணம் தான் எனக்கு அவைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்ற யோசனை வந்து அதை செயல்படுத்த தொடங்கினேன்.
முதலில் கொஞ்சம் கொஞ்சமாக பறவைகள் வந்தது போகப்போக எண்ணிக்கை கூட ஆரம்பித்துவிட்டது. தற்போது என்னுடைய வீட்டிற்கு 6000 கிளிகள் வருகிறது. இது சில நேரம் 10,000 15,000 வரைக்கும் கூட போகும். நான் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பறவைகளுக்கு உணவளித்து வருகிறேன். தினமும் 60 கிலோ அரிசி 15 கிலோ வேர்க்கடலை போன்றவற்றை உணவாக வைத்து வருகிறேன் என்று கூறுகிறார்.
சுதர்ஷனின் மனைவி வித்யா அவர்களும் இவருடன் சேர்ந்து பறவைகளுக்கு உணவளித்து வருகிறார். அவர் கூறும் போது எனது கணவருக்கு பறவைகளுக்கு உணவளிக்கும்போது ஒரு பெரிய சந்தோசம் அவர் முகத்தில் தெரியும். அதனால் தான் அவருடன் சேர்ந்து நானும் செய்ய ஆரம்பித்துவிட்டேன். தினமும் இடங்களை சுத்தப்படுத்துவது பறவைகளுக்கு உணவு வைப்பது என்று நானும் அவர்களோடு கூடவே வேலை செய்வேன். கிளிகளுக்கு தண்ணீர் வைப்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குடிப்பார்கள் அது எல்லாமே நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறுகிறார்.
மேலும் இந்த தம்பதி பார்வையாளர்களுக்கும் அனுமதி அளிக்கிறார்கள். தினமும் மாலை நாலு முப்பது மணிக்கு மேலாக சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் பறவைகளை கண்டு ரசிக்கலாம். ஆனால் இதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். தினமும் 25 நபர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். இதற்கு கட்டணம் எதுவுமே வாங்காமல் இலவசமாக தான் பறவைகளை பார்வையிட அனுமதிக்கிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…