இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக் காட்டுங்கள் என்று திமுகவிற்கு ஆதவ் அர்ஜுனா அதிரடியாக சவால் விடுத்துள்ளார். ஆர்.கே. நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ பல்லவியை நீங்கள் எப்போது அவமானப்படுத்தினீர்களோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு நடந்த அவமரியாதைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தல் களம் அமையும் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு நேரடி சவாலாகவே விடுகிறேன் என்றும் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாக முழங்கியுள்ளார். இவரின் இந்த அதிரடி பேச்சு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…