திருச்சி விஜய் பரப்புரையில் ஆதவ் அர்ஜுனாவின் கார் மோதி போலீஸ் ஒருவரின் கால் முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் கால் முறிந்ததும் அங்கிருந்த சக போலீஸ் உடனடியாக அவரை தூக்கிச் சென்று தமிழக வெற்றிக்கலகம் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். முன்னதாக விஜய் வந்த போது ஒரு தம்பதி இருசக்கர வாகனத்திலிருந்து விஜய் கண் முன்னே தவறி விழுந்த நிலையில் தற்போது அடுத்த விபத்து நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
