“₹2.5 லட்சம் சம்பளம் ஒரு சாபமா?”… கார்ப்பரேட் உலகின் கசப்பான உண்மையை உடைக்கும் இளம்பெண்… வைரலாகும் பெண்ணின் கண்ணீர் பதிவு…!!!

By Rajeshwari on பங்குனி 23, 2026

Spread the love

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பெண்ணின் பதிவு, நவீன கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாதம் ₹2.5 லட்சம் சம்பளம் வாங்கியும் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும், மாறாக முன்னொரு காலத்தில் மாதம் ₹15,000 வருமானத்தில் கிடைத்த மனநிறைவும் மகிழ்ச்சியும் இப்போது இல்லை என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிக ஊதியம் தரும் நிறுவனங்கள் ஊழியர்களின் நேரத்தையும், உடல்நலத்தையும், தனிப்பட்ட வாழ்வையும் எவ்வாறு முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன என்பதை அவர் தனது பதிவில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

   

இந்த கார்ப்பரேட் உலகில் பணத்தைத் துரத்தி ஓடும் ஓட்டத்தில், மனிதர்கள் தங்களின் மன அமைதியை இழந்து வருவதையே இந்தப் பெண் சுட்டிக்காட்டுகிறார். வேலையில் இருக்கும் கடுமையான அழுத்தம் மற்றும் இடைவிடாத பணிச்சுமை காரணமாக, கைநிறைய சம்பளம் இருந்தும் அதை அனுபவிக்கக்கூட நேரமில்லாத ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையை வாழ வேண்டியிருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

   

இந்நிலையில் வெறும் காகிதப் பணத்தை விட, குறைந்த வருமானத்தில் கிடைத்த சுதந்திரமும் நிம்மதியுமே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்த்தும் இவரது பதிவு, தற்கால இளைஞர்களைத் தங்கள் வாழ்க்கை முறை குறித்து மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்துள்ளது.