பெங்களூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ரெடிட் தளத்தில் தனது வாழ்க்கையின் சோகத்தை பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த வாலிபருக்கு பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அது நான்காவது நிலையில் இருந்ததால் அவரது உடல் நலம் மோசமானது. பல மாதங்களாக கிமோதெரபி உட்பட எல்லா சிகிச்சைகளையும் அந்த வாலிபர் எடுத்து வருகிறார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை.
மருத்துவர்களும் கைவிட்டதாக தெரிகிறது. இதனால் இந்த ஆண்டிற்கு பிறகு தான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், இதுதான் தனக்கு கடைசி தீபாவளி எனவும் வாலிபர் பதிவிட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பயணம், தொழில், நாய் தத்தெடுத்தல் போன்ற நிறைவேறாத கனவுகளும், பெற்றோரின் சோகமும் தன்னை வாட்டுவதாக வாலிபர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…