Categories: இந்தியா

உஷார்..! “நிமிடத்திற்கு 200 முறை துடித்த இதயம்” வெறும் பூஞ்சை தொற்றுதானே என நினைத்து.. ஒரே ஒரு மாத்திரையால் இதயம் செயலிழக்கும் நிலைக்குச் சென்ற அதிர்ச்சி..!!

Spread the love

மருத்துவரின் முறையான ஆலோசனையின்றி நாமே மருந்துகளை உட்கொள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒரு அதிர்ச்சிகரமான மருத்துவச் சம்பவம் உணர்த்தியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் (ER) பணியாற்றும் மருத்துவர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலின்படி, வெறும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது உடலில் ஏற்பட்ட சிறிய பூஞ்சை தொற்றுக்காக (Fungal Infection), மருந்தகத்தில் நேரடியாக ‘புளூகோனசோல்’ (Fluconazole) 150 மி.கி மாத்திரையை வாங்கி உட்கொண்டுள்ளார். ஆனால், அந்த ஒரு மாத்திரை அவரது உடலில் ஏற்படுத்திய வினை மருத்துவர்களையே அதிச்சியில் ஆழ்த்தியது.

மாத்திரையை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அந்த இளைஞருக்கு இதயத் துடிப்பு தாறுமாறாக அதிகரித்து, நிமிடத்திற்கு 200 முறைக்கும் மேல் துடிக்கத் தொடங்கியுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ‘QT prolongation’ எனப்படும் ஆபத்தான இதய மின்சுற்று பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இது இதயத்தின் சீரான இயக்கத்தைப் பாதித்து, திடீர் இதய முடக்கம் அல்லது உயிரிழப்புக்குக் கூட வழிவகுக்கக்கூடிய ஒரு தீவிரமான நிலையாகும். அந்த இளைஞர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.

இந்தச் சம்பவம் சுய மருத்துவத்தின் (Self-medication) விபரீதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. புளூகோனசோல் போன்ற சாதாரண மாத்திரைகள் கூட சிலருடைய மரபணு அமைப்பு அல்லது ஏற்கனவே இருக்கும் உடல் நிலையைப் பொறுத்து விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஒரு சிறிய தும்மல் அல்லது தோல் அரிப்பு என்றாலும், தகுதியான மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மருந்தையும் உட்கொள்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. மருந்துகளை வாங்குவதற்கு முன்பு அது உங்கள் உடலுக்கு ஏற்குமா என்பதை ஒரு நிபுணரின் மூலம் உறுதி செய்வது மட்டுமே உங்கள் உயிரைக் காக்கும்.

Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

2 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

2 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

2 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

3 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

3 மணத்தியாலங்கள் ago