கோவில்பட்டி அருகே காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகள் உமா (19). இவர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள ஒரு தனியார் காவலர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் திருவேங்கடம் அருகே உள்ள கொழக்கட்டை குறிச்சியை சேர்ந்த மாரிச்சாமி என்பவருடைய மகன் ராஜேஷ் (25) என்பவரும் பயின்று வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கந்தூரி ரங்காபுரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒரு கட்டத்தில் உமாவை ராஜேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரிந்த போலீசார் உமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில்…
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,…