தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதற்கான அதிகாரபூர்வ அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 01.05.2025 முதல் 28.02.2026 வரையிலான காலகட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களின் நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் ₹5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் இந்த திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் குறு, சிறு விவசாயிகளுக்கு ₹75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அவரது அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது அதற்கான அரசாணை முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி நடவடிக்கை மூலமாகத் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர விவசாயக் குடும்பங்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…