சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள கெரகச்சார் கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான மங்லோ பாய் எனும் பெண், கைபேசியில் ரீல்ஸ் பார்ப்பதை வழக்கமாகப் கொண்டிருந்தார். நாளடைவில் இதில் தீவிர கவனம் செலுத்திய அவர், தொடர்ந்து ரீல்ஸ் பார்க்கும் அளவுக்கு இதற்கு அடிமையானார்.
சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் கைபேசியில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இணைய சேவை சீராக இல்லாமல் அடிக்கடி தடைபட்டது. இதனால் ரீல்ஸ் தொடர்ந்து இயங்காமல் நின்றதால் கடும் ஆத்திரமடைந்த அப்பெண், கோபத்தில் தனது கைபேசியைத் தரையில் ஓங்கி அடித்து நொறுக்கினார்.
கைபேசி உடைந்த பிறகும் ஆத்திரம் தணியாத நிலையில், அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அவரது 17 வயது மகள் உடனடியாகக் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…
தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…
தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…
மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…
ஒரு முஸ்லிம் பெண் கணபதி பாப்பா மீது காட்டும் பேரன்பைக் கண்டு சிலர் வியப்படையலாம். ஆனால், நமது இந்தியாவின் உண்மையான…