சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியில் நின்று கொண்டிருக்கும் பெண் ஒருவர், கட்டுக்கட்டாக இருக்கும் ரூபாய் நோட்டுகளைக் கீழே வீசி எறிகிறார். 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து கீழே விழுவதைக் கண்டதும், அந்த வீதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சாலையில் சிதறிக் கிடக்கும் பணத்தை எடுப்பதற்காக மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தின் போது, கீழே நின்றவர்கள் பணத்தை எடுப்பதற்காக ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டும், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்தப் பெண் எதற்காக இவ்வாறு பணத்தை வீசினார் என்ற காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது ஒரு விளம்பர உத்தியா அல்லது மன அழுத்தம் காரணமாகச் செய்யப்பட்ட செயலா என்பது குறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். எவ்விதப் பொறுப்புணர்ச்சியும் இன்றி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இவ்வாறு செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடின உழைப்பில் வந்த பணம் என்றால் யாரும் இப்படித் தெருவில் வீச மாட்டார்கள் என்றும், இந்தப் பணத்தின் பின்னணியில் ஏதேனும் மர்மம் இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். தற்போது இந்த வீடியோ எக்ஸ் (X) தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை வாரி இறைத்த அந்தப் பெண் யார்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…