திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, ஒரு மணப்பெண் தனது பழைய காதலனை சந்திக்கச் சென்ற அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஸ்ரேயா என்ற அந்தப் பெண், முழு மணப்பெண் அலங்காரத்தில் தனது நண்பருடன் காரில் ஒரு இடத்திற்குச் செல்கிறார்.
திருமணச் சடங்குகள் தொடங்க இன்னும் இரண்டே மணி நேரம் இருக்கும் நிலையில், அந்த மணப்பெண் குடும்பத்தின் அழுத்தத்தால் இந்தப் புதிய திருமணத்திற்குச் சம்மதித்துள்ளதாகவும், ஆனால் அவரது மனம் இன்னும் தனது முதல் காதலனிடமே இருப்பதாகவும் அவரது நண்பர் வீடியோவில் தெரிவிக்கிறார். அந்தப் பெண் தன் நண்பரிடம் கெஞ்சிய பின்னரே, கடைசி முறையாகச் சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.
View this post on Instagram
அந்தப் பெண் காரில் இருந்து இறங்கி, தனது முன்னாள் காதலனைச் சந்தித்து, சிறிது நேரம் பேசி, கட்டிப்பிடித்துவிட்டு உடனடியாகத் திரும்பிக் காரில் வந்து அமர்கிறார். இந்தச் சிறிய சந்திப்புக்குப் பின் அவள் முகத்தில் துக்கம், ஆறுதல் மற்றும் நிர்ப்பந்தம் ஆகிய கலவையான உணர்வுகள் காணப்பட்டன.
இந்த உணர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையாகவே அவ்வளவு அன்பு இருந்திருந்தால் ஏன் திருமணம் செய்யவில்லை என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், மணமகனுக்குச் சிறிதும் தெரியாமல் அவரது வாழ்க்கை பணயம் வைக்கப்படுவது தவறு என்றும், மணமகனுக்கு அனுதாபம் தெரிவித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
