வேலையை விட்டுட்டேன்… வீட்டில் பொய் சொல்லிவிட்டு ரகசியமாக பிளிங்கிட் டெலிவரி பார்க்கும் பெண்… கணவருடன் கருத்து வேறுபாட்டால் நேர்ந்த அதிரடி திருப்பம்…!

By Swetha on புரட்டாதி 2, 2026

Spread the love

சந்திரௌலி மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா மௌரியா, தனது கணவருடன் சுமுகமான உறவு இல்லாத சூழலில், குடும்பச் சூழ்நிலையின் கட்டாயத்தின் காரணமாக பிளிங்கிட் நிறுவனத்தில் டெலிவரி பணியில் சேர்ந்தார்.

பெண்கள் இந்த வேலையை எப்படிச் செய்ய முடியும் என்று குடும்பத்தினர் ஆரம்பத்தில் எதிர்த்தனர். இதனால், குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சமாளிக்க வேலையை விட்டுவிட்டதாக அவர்களிடம் மம்தா பொய் கூறினார்.

   

ஆனால், வேலையை விடாமல் அவர் தொடர்ந்து பிளிங்கிட்டில் பணியாற்றினார். தொடக்கத்தில் ஆண்க மட்டுமே பணிபுரியும் சூழலில் சற்று தயக்கம் இருந்தபோதிலும், தற்போது மேலும் சில பெண்களும் இணைந்திருப்பதால் அந்தத் தயக்கம் நீங்கி வேலை எளிதாகியுள்ளது.