கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற பிறகு, வீட்டுப் பொறுப்புகள் மற்றும் குழந்தைகளை வளர்க்கும் சுமை முழுமையாகத் தன் தோள்களில் விழுந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் கணவருடன் பேச்சுவார்த்தை இருந்தபோதிலும், காலப்போக்கில் அவர்களுக்கு இடையேயான தூரம் அதிகரித்து, தனிமை தன்னை வாட்டத் தொடங்கியதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடினமான காலக்கட்டத்தில், தனது மாமனாரின் துணையும் ஆறுதலும் மட்டுமே தனக்கு ஆதரவாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்ததில், தங்களுக்குள் எப்போது இவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என்பதே தெரியவில்லை என்றும் அவர் விவரித்துள்ளார். தற்போது தாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி, கணவன் – மனைவி போல ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தனக்குத் தோன்றவில்லை என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் இப்போது தனது வாழ்வின் ஒரு பகுதியாக இல்லை என்றும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ‘பிளாக்’ செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். தனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மாமனாரின் முகம் மட்டுமே தனது புதிய வாழ்வின் விடியலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த வினோதமான மாற்றம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
