“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்த சிறுவனை, தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்டனர். தன் கண் முன்னே வளர்த்த மகன் மறைந்த செய்தியைத் தாங்க முடியாமல் அவனது தந்தை விநாயகம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

மகனைப் பறிகொடுத்த சோகத்தில் இருந்த விநாயகம், அடுத்த நாளே தன் மகன் எங்கு விழுந்து இறந்தானோ அதே கிணற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உயிருக்குப் போராடிய அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்த நாட்களில் ஒரே குடும்பத்தில் தந்தை மற்றும் மகன் என இருவர் மரணமடைந்தது அப்பகுதி மக்களை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் கண்களும் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.