#image_title
இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வாழ்க்கை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆண்கள் பெண்கள் இருவரும் வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் அப்படி வேலை செய்தால் மட்டுமே இன்றைய விலைவாசி உயர்வில் ஏதாவது கொஞ்சம் மிச்சம் பிடிக்க முடியும். அதனால் அனைவரும் இன்று காலகட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால் பலருக்கு சமைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. அந்த காலத்தில் அம்மா பாட்டி ஆகியோர்கள் பார்த்து பார்த்து ஒவ்வொரு உணவையும் சமைப்பார்கள். உடலுக்கு எது நல்லதோ அதை மெனக்கட்டு எடுத்து செய்வார்கள். ஆனால் இன்று இளம் தலைமுறை சேர்ந்த பெண்கள் பலருக்கு சமையல் செய்ய தெரிவதே இல்லை. எல்லோருக்கும் எளிதான தற்போது காரியம் கடையில் வாங்கி சாப்பிடுவது.
அதையும் தாண்டி சுவிக்கி சொமட்டோ போன்றவற்றில் ஆர்டர் செய்து சாப்பிடுவது தான் தற்போது ட்ரெண்டாக இருக்கிறது. கூடவே வேலைப்பளு காரணமாக சமைக்க நேரமில்லாததால் ஆர்டர் போட்டு சாப்பிடும் பழக்கத்திற்கு மக்கள் அடிமையாகி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த ஃபுட்டு ஆர்டர் செய்யும் ஒரு செய்முறை மிகவும் பிரபலமாகிவிட்டது.
இது பலருக்கு உதவிகரமாக இருந்தாலும் கூட சிலருக்கு இதில் கெட்ட விஷயங்கள் நடக்க தான் செய்கிறது. அப்படி கன்னியாகுமரியை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்திருக்கிறார். பீட்சா டெலிவரி ஆன பிறகு அந்த பீட்சா கடை ஊழியவர் இந்த பெண்ணின் போன் நம்பரை எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்து டார்ச்சர் செய்திருக்கிறார்.
உடனே அந்தப் பெண் நம்பரை பிளாக் செய்தாலும் கூட வேறு வேறு நம்பரில் இருந்து அந்த இளைஞர் தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறார். உடனே காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்து இருக்கிறார். காவல் நிலையத்தில் அந்த இளைஞரை அழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர். பெண் வீட்டார் இந்த பிரச்சனையை மேன்மேலும் கொண்டு செல்ல விரும்பாததால் அந்த இளைஞர் காவல்துறை எச்சரிப்புடன் சென்றிருக்கிறார். அதனால் இன்றைய காலத்து பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எங்கேயும் தனிப்பட்ட போன் நம்பர்களை தரக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…