மேகாலயாவைச் சேர்ந்த ஒரு பெண், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான பாகுபாட்டை சுட்டிக்காட்டி, ஒரே நாளில் டெல்லியில் தான் சந்தித்த இரண்டு இனவெறி சம்பவங்களை விவரிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். @__insolitude என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த காணொளியில், பொது இடங்களில் இனரீதியான அவதூறுகளால் கேலி செய்யப்பட்டதையும், தனது சொந்த நாட்டிற்குள் தான் அந்நியப்படுத்தப்பட்டதாக உணருவதையும் அந்தப் பெண் உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார். தற்போது வைரலாக பரவி வரும் இந்த காணொளியில், டெல்லி தெருவில் நடந்து சென்றபோது, ஸ்கூட்டரில் நின்றிருந்த ஆண்கள் குழு ஒன்று தனது தோற்றத்தை கேலி செய்து, தங்களுக்குள் சிரித்துக் கொண்டே “சியோங் சியோங்” என்று கூப்பிட்டார்கள்.
நான் திரும்பி அவன் கண்களை நேராகப் பார்த்தேன். அவர்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தனர். அது உலகின் வேடிக்கையான விஷயம் போல. அதே நாளில், மெட்ரோவில் பயணம் செய்யும் போது, ஒரு பயணி முன்னோக்கி சாய்ந்து, “சிங் சோங் சீனா” என்று மற்றவர்கள் கேட்கும் அளவுக்கு சத்தமாக சொன்னார். இதனால் மற்றொரு மற்றொரு இனரீதியான அவமானத்திற்கு ஆளானேன் என்று கூறியுள்ளார். “சக இந்தியர்களால்” வெளியாட்களைப் போல நடத்தப்பட்டதால், தான் ஒரு இந்தியனா? என்ற எண்ணம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் கூறினார்.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…