திக் திக் நிமிடங்கள்…! காரை நோக்கிப் பாய்ந்து வந்த காட்டு யானை…. உறைந்து போன பாதிரியார்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

கேரள மாநிலம் சுல்தான் பேத்தேரி-குண்டுல்பேட்டை நெடுஞ்சாலையில், திருக்கைப்பெட்டா செயின்ட் தாமஸ் யாக்கோபாய திருச்சபையின் பாதிரியார் ரெஜி பால் மற்றும் அவரது குடும்பத்தினர் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சீற்றமடைந்த காட்டு யானை ஒன்று அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுல்பேட்டையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் மூன்று காட்டு யானைகள் குறுக்கிட்டதால் வாகன ஓட்டிகள் நிறுத்தப்பட்டனர். யானைகள் காட்டிற்குள் சென்றதாகக் நினைத்து வாகனங்கள் மெதுவாக நகரத் தொடங்கியபோது, ஒரு யானை திடீரெனத் திரும்பி வந்து பாதிரியாரின் காரை மிக அருகில் நெருங்கி அச்சுறுத்தியது.

காரின் பின்னே பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், காரைப் பின்னோக்கி எடுக்க வழியின்றிப் பாதிரியாரின் குடும்பத்தினர் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நல்லவேளையாக, யானை அசம்பாவிதம் எதுவும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்ததால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாகப் காயங்களின்றித் தப்பினர். இந்தத் திகில் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.