#image_title
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது சினிமா தான். சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்திருப்பார்கள். சிலர் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவார்கள். தீபிகா படுகோனே, ஆலியா பட், ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா போன்றோரை தான் அதிக சம்பளம் ஆகும் நடிகையாக நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர்களையும் தாண்டி அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா?
அவர்தான் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா. விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. இவர் பெரும்பாலும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர். 2000 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டு தமிழில் நடித்ததற்கு பிறகு வரிசையாக ஹிந்தி ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரியங்கா சோப்ரா பர்பி, மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி போன்றவை பிரியங்கா சோப்ரா நடித்ததில் குறிப்பிடத்தகுந்தவை ஆகும். அதன் பிறகு ஹாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பினார் பிரியங்கா சோப்ரா.
2017 ஆம் ஆண்டு பே வாட்ச் என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று அவரை பிரபலம் அடைய வைத்தது. தொடர்ந்து இசட் இட் ரொமான்டிக், வி ஆர் ஹீரோஸ், தி மேட்ரிக்ஸ் ரிசப்ஷன், லவ் அகைன் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றார் பிரியங்கா சோப்ரா.
பாலிவுட் திரையுலகில் நடிக்கும் போது பிரியங்கா சோப்ரா சம்பளமாக 15 இல் இருந்து 20 கோடி வரை வாங்கிக் கொண்டிருந்தார். தற்போது ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட 40 கோடி என்பதாகும். இந்த நிலையில் பார்க்க போனால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா இடம்பிடித்து இருக்கிறார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…