புடவை அணிந்துதானே நடனமாடினேன்… இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது..? கதறி அழுத பல்கலைக்கழக மாணவி… சமூக வலைதளங்களில் ‘ட்ரோல்’ செய்யப்பட்ட கொடுமை..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) சார்பில் ‘சன்ஸ்கார் சங்கம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவி ஒருவர் நடிகை மாதுரி தீட்சித்தின் புகழ்பெற்ற ‘தக் தக்’ பாடலுக்கு நடனமாடினார். அந்த நடனம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கலாச்சாரம் மற்றும் கண்ணியம் குறித்த விவாதங்கள் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தன.

வீடியோ வைரலான உடனே, இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். “கலாச்சார நகரம் என்று போற்றப்படும் வதோதராவில், கலாச்சார நிகழ்வு என்ற பெயரில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது ஏன்?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் (Troll) செய்யப்பட்டார்.

   

   

தன்னைப் பற்றி பரப்பப்படும் விமர்சனங்களால் மனமுடைந்த அந்த மாணவி, கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் புடவை அணிந்துதானே நடனமாடினேன், இதில் எங்கே ஆபாசம் இருக்கிறது?” என்று அழுதுகொண்டே கேள்வி எழுப்பியுள்ளார். அந்த மாணவி கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.