விளாங்குறிச்சி பகுதியில் 9வது வார்டு வட்டச் செயலாளர் மயில்சாமி உட்பட 70க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் இருந்து விலகி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக நாங்கள் திமுகவில் வகித்து வரும் பதவிகளில் இருந்து விலகுகிறோம். எங்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த ராஜினாமா கடிதங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், இத்தனை நிர்வாகிகள் ஒரே நேரத்தில் விலகியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது விவாதப் பொருளாகியுள்ளது. ‘தனிப்பட்ட காரணங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், உட்கட்சிப் பூசல்கள் அல்லது தலைமையிடம் நிலவும் அதிருப்தி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் திமுக தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
