“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஆவணி 7, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால் நாய்களையும் தங்கள் அணியில் சேர்த்து விளையாடிய சுவாரசியமான காட்சி இடம்பெற்றுள்ளது. கரடுமுரடான பாறைகள் நிறைந்த மைதானத்தில் சிறுவர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாட, அவர்களுடன் இரண்டு நாய்களும் களமிறங்கி விளையாடியது காண்போரைக் கவர்ந்துள்ளது.

இந்தச் போட்டியில் நாய்கள் வெறும் பார்வையாளர்களாக நிற்காமல், திறமையான பந்தாட்டக்காரர்களாகச் செயல்பட்டுள்ளன. அதில் ஒரு நாய் ‘விக்கெட் கீப்பர்’ போல செயல்பட்டு பந்தை சுறுசுறுப்பாகக் கவ்விப் பிடித்தது. மற்றொரு நாய் பாறைகளுக்கு இடையே வேகமாக ஓடிச் சென்று பந்தைப் பிடிப்பதோடு, பேட்ஸ்மேன் அடித்த பந்தை காற்றில் பறந்து கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

   

நாய்களின் இந்த வேகத்தையும், சிறுவர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள பிணைப்பையும் கண்டு இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர். “வாழ்க்கையின் பிரீமியம் சந்தா” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, மகிழ்ச்சி என்பது விலையுயர்ந்த பொருட்களில் இல்லை; இதுபோன்ற எளிய தருணங்களில்தான் உள்ளது என்பதை உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.