நெல்லையை சேர்ந்தவர் துரைராஜ் (33), தொழிலாளி. துரைராஜிக்கும், தனலட்சுமிக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன. கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, தனலட்சுமி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, 7 மாதங்களுக்கும் மேலாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று காலை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக, பஸ் ஸ்டாப்புக்கு வந்த தனலட்சுமியிடம் பேசினார் துரைராஜ். பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனலட்சுமி தனது தாய்க்கு (பேச்சியம்மாள்) தொடர்பு கொண்டார். உடனே பஸ் ஸ்டாப்புக்கு ஓடி வந்து, மகளுக்கும் – மருமகனுக்கும் இடையே உள்ள மோதலை தடுக்க முயன்றார், பேச்சியம்மாள். மாமியாரை கண்டதும் மேலும் ஆத்திரம் அடைந்த துரைராஜ், தனது மாமியாரின் கைவிரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பேச்சியம்மாவை, பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
