வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… காதலன் இல்லாத நேரத்தில் அரங்கேறிய அநாகரிகம்… நீதி கேட்டு நெதர்லாந்தில் இருந்து பறந்து வந்த பெண்… போலீஸ் அதிரடி…!

By Visaka on ஆடி 28, 2026

Spread the love

ஹைதராபாத்தில் கொண்டபூர் பகுதியில் தனது காதலருடன் தங்கியிருந்த 36 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை, அங்கு தங்கியிருந்த ஆதித்யா ஆனந்த் என்ற மென்பொருள் பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்திருந்த அப்பெண், காதலர் இல்லாத நேரத்தில் தனிமையை பயன்படுத்தி அந்த நபர் தன்னை அரைநிர்வாணமாகத் தொல்லைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். காதலர் வந்ததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பிய அப்பெண், நெதர்லாந்து திரும்பிய பிறகே தனது காதரிடம் நடந்துகூறி, டச்சு தூதரகத்தின் உதவியுடன் ஜூலை 22 அன்று ஹைதராபாத் வந்து முறைப்படி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

https://twitter.com/TeluguScribe/status/2081761962925658465/photo/1

   

இப்புகாரின் அடிப்படையில் கச்சிபோலி காவல் நிலைய காவல்துறையினர் பாரதிய நியாய சங்கிதா சட்டத்தின் 74, 75, 78 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவான குற்றவாளியான ஆதித்யா ஆனந்தைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் தைரியமாக வந்து புகார் அளித்துள்ள இச்சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.