படுக்கையறையில் உஷ்ஷ் உஷ்ஷ் சத்தம்..! ஜன்னல் வழியே வந்த 10 அடி எமன்… அசையாமல் இருந்ததால் உயிர் பிழைத்த தம்பதி… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

Spread the love

தாய்லாந்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த தம்பதியினருக்கு, அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. அந்த தம்பதியினர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, சுமார் 10 அடி நீளமுள்ள பிரம்மாண்ட ராஜநாகம் (King Cobra) ஒன்று அவர்களின் படுக்கைக்கு மேல் ஊர்ந்து சென்றது. இந்தச் சம்பவம் அந்த விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வைரலாகி காண்போரை உறைய வைத்துள்ளது.

அந்தக் காணொளியில், தம்பதியினர் போர்வையைப் போர்த்திக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காண முடிகிறது. அப்போது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த அந்த ராஜநாகம், மெதுவாக மெத்தை மீது ஏறி அவர்கள் கால்களுக்கு மிக அருகில் ஊர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் அந்தப் பாம்பு தம்பதியினரின் உடல் மீது ஏறுவது போன்ற சூழல் உருவானது. சிறு சத்தம் கேட்டிருந்தாலும் அல்லது தம்பதியினர் தூக்கத்தில் புரண்டு படுத்திருந்தாலும் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், நல்வாய்ப்பாக அவர்கள் அசையாமல் இருந்ததால், அந்த நச்சுப் பாம்பு யாரையும் தீண்டாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றது.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள், “இது நிஜமான அதிர்ஷ்டம்” என்றும், “இதைவிட ஒரு பயங்கரமான கனவு இருக்க முடியாது” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளைச் சரியாகப் பூட்ட வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. தூக்கத்தில் எமனாக வந்த பாம்பிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய அந்தத் தம்பதியினரின் வீடியோ தற்போது உலகளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

Soundarya

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

6 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

6 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

6 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

7 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

7 மணத்தியாலங்கள் ago